- ஒரு அன்னையின் கனவு
நடராஜன் கல்பட்டு
தூளியிலே ஒரு நாளு
தூங்கிய எங்கொளெந்தெ
தூக்கினா அடிச்சான்
மூஞ்சியிலே மூத்திரத்தெ
பன்னீரு தெளிச்ச சந்தோசம்
அவன் மனசுலெ
பொக்க வாயெத் தொறந்தே
சிரிச்சிட்டான் என்னெப் பாத்தே
பள்ளியிலெ படிக்குறான் அவன் இப்போ
சுள்ளி ஒண்ணெக் கையிலெ எடுத்துகிட்டே
ஓட ஓட வெரட்டுறான் என்னியே
பள்ளிக்கு நேரத்துலெ வரவோணும்
பாடத்துலெ கவனம்
செலுத்த வோணுமின்னே
சட்டாம் புள்ளே அவந்தானாம்
எட்டங் கிளாசுலெ அவன் இப்போ
எட்டாத ஒசரத்தெ
எட்டியே புடிச்சிடுவானோ
பத்தங்கிளாசு தாண்டினா எம் புள்ளெ
படிக்கோணும் மேலெ நான்
பட்டணந்தான் போயிம்பான்
சட்டுனு எடுத்தே கொடுத்திடுவவேன்
சட்டிலெ சேத்து வெச்செ
பணங்காசெ அவங் கையிலே
படிச்சுடுவான் எம் புள்ளே
பட்டமுந்தான் வாங்கிடுவான் ஒரு நாளு
படிச்ச புள்ளெக்கு
வேலெ ஏது இந்தப்
பட்டிக் காட்டு ஊருலே
பறந்து போவான் எம் புள்ளே
எட்டாத தூரத்துகே ஒரு நாளு
எங் கெருந்தா என்ன எம்புள்ளெ
நல்லா இருந்தாப் போது மவன்
சிரிச்சுக் கிட்டே காலெத்தெ கழிச்சுடுவேன்
பொட்டெப் புள்ளெ நானுந் தான்
Designed and maintained by AKR Consultants
