- God Answers Prayers
- பார்வமணி
ஒரு பாதிரியார் சர்ச்சிலிருந்து வீடு திருமப ஆயத்தமானார்.அன்று சனிக்கிழமை. மனைவியை தொலை பேசியில் அழைத்து தான் புறப்பட்டு விட்டதாக தகவல் சொல்லுவோம் என்று ஃபோனில் அழைத்தார். மணி அடித்துக்கொண்டிருந்ததே தவிர அவர் மனைவி ஃபோனை எடுக்கவே இல்லை. பல் தடவை கூப்பிட்டும் மனைவி லைனில் வராதது கண்டு மறுடியயும் அழழைப்பதை விட்டுவிட்டு, கடைசியாக எல்லாம் ச்ரியாக உள்ளதா என்று பார்த்துவிட்டு கிளம்பினார். கடைசியாக இன்னும் ஒரு முறை வீட்டுற்கு ஃபோன் அடித்தார். மனைவி பேசினாள்.
"பல தடவை ஃப்போன் அடித்தேன் ஏன் எடுக்கவில்லை?" என்று கேட்டார்.
"ரிங்கே வரலையே, இப்பொழுதுதான் வந்தது, எடுத்தேன்" என்றாள்.
"ச்ரி, நான் வீட்டிற்கு வந்துகொண்டிருக்கிறேன்" என்று சொல்லி வைத்துவிட்டார். அதன் பிறகு அந்த சம்பவத்தை மறந்து விட்டார்
திங்கள் கிழமை பாதிரிக்கு ஒரு ஃபோன் (அவர் சனிக்கிழமை உபயோகியத்த ஃபோனுக்கு) வந்தது.
ஃபோனில் அழைத்தவர் கேட்டார், "ஏன் சனிக்கிழமை என்னை அழைத்தீர்கள்?" என்று.
பாதிரிக்கு ஒன்றும் புரியவிலலை. நாம் யாரையும் அழைக்கவில்லையயே, இவர் என்ன இப்ப்டி கேட்கிறாரே என்று திகைத்தார்.
மறு முனையில் இருந்தவர் சொன்னார், "ஃபோன் அடித்துக்கொண்டே இருந்தது, நான்தான் எடுக்கவில்லை என்றார்.
பாதிரிக்கு இப்பொழுது புரிந்தது. சனிக்கிழமை, மனைவிக்கு போட்ட ஃபோன் இந்த மனிதருக்கு போய்விட்டது போலிருக்கு என்று, அவ்ரிடம் அன்றைய சமபவத்தை விளக்கி, தவறுதலுக்கு மன்னிப்பு கேட்டார்.
"அதை விடுங்கள், நன்சொல்லும் விஷயத்தை கேளுங்ககள்" என்றார்.
அவர் சொன்னார், "சனிக்கிழமையன்று இரவு, நான் என் உயிரரை மய்த்துக்கொள்ள தீர்மானித்தேன். பிறகு கடவுளிடம் ப்ரர்ர்த்தித்தேன், 'கடவுளே நீங்கள் இருப்பதானால், நான் இதை செய்யக்கூடாது என்று நீங்கள் விருமபினால் எனக்கு இப்பொழுதே ஏதாவது அறிகுறி காட்டுங்கள்' அது சமயம் ஃபோன் அடித்தது. யார் கூப்பிடுவது என்று caller IDயை பார்த்தேன். அதில் "Almighty God" என்று இருந்தது. ஃபோனை எடுத்து பேச பயமாக இருந்தது. பேசாமல் இருந்து வவிடடேன்" என்றார்.
ஏன் அந்த மாதிரி caller Id-ல் இருந்தது என்றால், பாதிரியார் வேலை செய்த சர்ச்சின் பெயர் "Almighty God Tabernacle".
இதிலிருந்து, ஊண்மையான் வேண்டுதலுக்கு கடவுள் பதில் அளிக்கிறார் என்று நம்புங்கள்.
பார்வமணி
Designed and maintained by AKR Consultants

